பசியது வருத்த...
உசுரா வளர்த்த பிள்ளைகள் ஓடிப் போனார்
உடன் வருவேன் என்றாள் உடைந்து போனாள்
அசதியின்றி அந்நாள் உழைத்த உடலிது
"ஆளை விடு" என கையை உயர்த்தியது
பசியது வருத்த படுத்திருக்க முடியாது
பாழும் வயிறோ நாளை வரை பொறாது
நசுங்கிய பாத்திரம் பெற்று தருகிறார் நல்லது
நாள் ஒவ்வொன்றையும் நகர்த்துவார் இவ்வாறு.
__. குத்தனூர் சேஷுதாஸ் 14/10/2025
No comments:
Post a Comment