அப்பா டக்கரா?
அப்புடீன்னா இன்னா?
இது ( வட) சென்னைத்தமிழ் சொல்லாடல்.
பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் சந்தானம் பேசிய நீ என்ன அவ்ளோ அப்பாடக்கரா என்ற வசனம் இளைஞர்கள் மத்தியில் வைரலானது.
எப்போதும் யாரோடும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அவர் ஒரு அறிவாளியாக இருந்தால், அவர் பெரிய அப்பாடக்கர் என்று அவரைப் பற்றி கூறுவது வழக்கம். இது நகைச்சுவைக்காக சொல்லும் வார்த்தை அல்ல .
உண்மையில் அப்படி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் அமிர்தலல் விதல்தாஸ் தக்கர். அவர் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதி.
குஜராத்தில் பிறந்தவர். பழங்குடி இன மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி வந்தவர்.
மகான் தக்கர்பாபா சென்னையில் சில காலம் இருந்தபோது, சென்னை மாகாணத்தில் பல போராட்டங்களை நடத்தி உள்ளார்.சென்னை வாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து வந்தனர்.குஜராத்திமொழியில் பாபா என்றால் அப்பா என்பது பொருள்.
வேதங்களிலும், ஞானங்களிலும் கரை கண்ட அவர் சிறந்த அறிவாளி.அவரிடம் எந்தத் துறைத் தொடர்பாக, எந்த கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதே போல ஒருவர் அறிவில் சிறந்தவராக இருந்தால், அவர் பெரிய அப்பா தக்கர் என்று சொல்லப்பட்டார். பிறகு சென்னை உச்சரிப்பில் இது அப்பாடக்கர் ஆகிவிட்டது.
1969 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்காக தபால் தலையை வெளியிட்டது.
தக்கர் பாபா வித்யாலயா என்று சென்னை தி.நகரில் ஒரு பள்ளி உள்ளது.
அப்பாடக்கருக்கு பொருள் புரியாமலேயே நாம், அமிர்தலல் விதல்தாஸ் தக்கருக்கு பெருமைசேர்த்துவருகிறோம்.
No comments:
Post a Comment