நற்சுனை 19
மறதி
கடந்து போன நாள்களெல்லாம்
கைக்கொட்டிச் சிரித்தன
என் கைகளில்..
சிரிப்பு,அழுகை
சிந்தனை வாதம்
வெற்றி தோல்வி
வழிபாடு பயணம்
கொண்டாட்டம் துக்கம்
பிறப்பு இறப்பு
தொலைந்துவிட்ட நட்பு
புதிதாய் அலர்ந்த ரோஜா
ஜன்னலோர மழை
நடைபயிற்சியில் பகிர்ந்த புன்சிரிப்பு
பண்டிகைப் பலகாரம்
என அனைத்தையும்
சரித்திரமாக்கிவிட்ட வெற்றுக் காகிதங்களாய்...
தினசரி நாள்காட்டியில் கிழிக்க மறந்த தேதிகளை கிழித்த பின்..
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment