நற்சுனை 18
மாய யோகி
யாருக்காகவும் புன்னகைக்க மறப்பதில்லை
யாருக்காகவோ அழுவதில்லை
யாருக்கும் அடிப் பணிவதில்லை
யாரையும் வெறுப்பதுமில்லை
கள்ளம் கபடமில்லை
கண் அயர்ந்து தியானிப்பதில் கடினமில்லை
எதிலும் பொய்மையில்லை
தூய்மையில் களங்கமில்லை
படைத்தவள் அரவணைப்பைத் தாண்டி
பற்றுதல் வேறு இல்லை
பசியைத் தாண்டி புசிப்பதில்லை
உடை துறந்தாலும் கூச்சமில்லை
தன் இருப்பில் சுற்றமெல்லாம்
அன்பு மயமாய்
மாற்றுமே மாயமாய்...
அகந்தை இல்லா குழந்தையே
மாய யோகியாய்!
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment