குடை !!!
அடை மழையிலும்
கோடை வெயிலிலும்
நம்மைக் காக்கும்
படை!!!
மடிக்கும் போது
தூங்குமே!
விரித்தால் உடனே
விழிக்குமே!
குடைகள்..
விரித்து மடித்து விளையாட
வண்ண பொம்மைகள்!
கருப்பு, வெள்ளையோடு
கண்கவரும் பல வண்ணங்கள்..
பூக்கள், கோடுகளோடு
அழகிய வடிவமைப்புகள்..
கண்ணாடி போலவும்
காட்டும் ஜாலங்கள்!!
ஆலங்கட்டிகள் தாளம் போடும்
மேளங்கள்!
மழையில் உழைத்துத்
தரையில் சிந்துமே
வியர்வைத் துளிகள்!!
நீண்ட பெரிய குடைக்குக் கீழே சிறு குடும்பமே இளைப்பாருமே!
சின்னஞ்சிறிய குடைகளோ
குட்டிச் சுட்டி
ராசாக்களுக்கும்
ராசாத்திகளுக்கும்
மணிமகுடமாகுமே!!
தள்ளாடும் வயதினிலே
ஊன்றுகோலாகவும்
பணி செய்யுமே!
மழைக்காலத்தில்
குடைக்கம்பிகளை
விரித்தாடும்
மயிலாகுமே!!!
சங்கீதா
No comments:
Post a Comment