Tuesday, September 2, 2025

உலக தேங்காய் நாளாம் (3, செப்டம்பர்)

 உலக தேங்காய் நாளாம் (3, செப்டம்பர்)


பொட்டுக் கடலையும், நீயும் நல்லிணை

   பூ இட்லி, வடையும் உம்மால் விற்பனை 


சட்டென்று விருந்து வர துவையல் ஆவாய் 

   சப்பு கொட்டி அவர் உண்ணக் காண்பாய்


சுட்ட அப்பளம், துவையலும் மிக விருப்பம் 

   சூப்பர் ஸ்டார் சொன்னது நினைவிருக்கும் 


குட்டி போடும் நாய்க்கு நீ கிடைத்தது போலாம் 

   கொடாதான் கையிலுள்ள பெரும் செல்வமாம் 



வெல்லமும், நீயும் சேர்ந்த "பூர்ணம்" கூட்டணி

   வெண் கொழுக்கட்டையாய் விநாயகர் கையணி


பல்லில் மாட்டிக்கொண்டு பாடாய் படுத்துவாய் 

   பர்பி என்ற பெயரிலோ நாவில் ஊறுவாய்


கொல்லைப் புறம் நீ குலைகுலையாய்த் தொங்குகிறாய்

   குத்தி துளையிட்டு குடிக்கத் தோன்றும் ஆசையாய் 

   

"சொல்லலையார்"க்கு நீ மிகவும் பிடித்தது ஏனாம்?

   சொல்! தேங்காய்! ஊர்க்குருவி என்னிடமாம்!


__. குத்தனூர் சேஷுதாஸ் 3/9/2025

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...