Wednesday, September 3, 2025

பழமொழிகள்

பழமொழிகள்

பழமொழிகளைப்பற்றி ஆய்வது, அறிவது எனக்குப்

பிடித்தமான ஒன்று. 


பழமொழிகள் நம்தமிழ்மண்ணின் பாரம்பரியம் மற்றும் வட்டார சொலவடை எனப் பலப்பல அரிய செய்திகளை நாம் அறியச்செய்கின்றன.


பழமொழிகளின் உண்மை வடிவம்,அவை இன்று மருவிய வடிவம் எனப்பார்த்தால் இவை எதைக்குறிப்பிட்டு உணர்த்துகின்றன என்பதை அறிய முடியும்.


நான் குறிப்பிடுவன யாவும் என் முயற்சி இல்லை-" சொந்த சாகித்யம் கிடையாது"!


பல தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களின் பதிவுகளை/ கருத்துகளைப்படித்து, உள் வாங்கிப் பதிவிட முயல்கிறேன்.

மாற்றுக்கருத்துகளுக்கும் வாய்ப்புண்டு.


இன்று-

அற்பனுக்கு வாழ்வு வந்தால், அர்த்தராத்திரியிலும் குடை பிடிப்பான் - அற்பனுக்கு( பணம் இல்லாதவனுக்கு) செல்வம் வந்தால் எப்படி அற்பமாக நடப்பான் என்று குறிப்பதாக அமைகிறது.


ஆனால்,


அர்ப்பணித்து வாழ்ந்து வருபவன், அர்த்தராத்திரியிலும் கொடை கொடுப்பான் என்பது பழமொழியின் உண்மை வடிவமாக இருக்கக்கூடும்


உண்டி குறைத்தல், பெண்டிர்க்கு அழகு -

இன்று வழங்குவது. 

பழமொழியில்,  பெண்களுக்கான " டயட்டிங்கா"?

இல்லை!


உண்டி (உணவு)யைக் குறைத்தால் பண்டிக்கு (வயிற்றுக்குச் சேரும்) அழகு / பொருள் = தொப்பை வராது

(பண்டி- வயிறு)


அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல - இன்று வழங்குவது. பெண்களை இழிவுபடுத்துவது போல உள்ளது. அதுவல்ல.


அரசினை (அரசமரத்தை) நம்பி புருசனைக் கைவிட்டது போல என்பது சரியாக இருக்கலாம். பெண்கள் அரச மரத்தை, மகப்பேறு வேண்டி சுற்றுவதுண்டு.  அரச மரம் அரசனாக, கருதப்படும். அரசுக்கும் வேம்புக்கும் திருமணம் செய்வதுண்டு, கிராமங்களில்.  ஆனால் அதை மட்டும் நம்பாமல் கட்டிய கணவனையும் நம்பி மகப்பேறு அடைய வேண்டும் என்று உணர்த்துவதாக இருக்கலாம்.    இந்த எளிய முயற்சியை , தொடர முயல்வேன்....


மோகன்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...