கி.ரா.வின் " கதவு "
ஆர்வக் குழந்தைகளோடு பசையாய் ஒட்டியது
அடுத்த ஊர் போகப் பேருந்தாய் ஓடியது
தீர்வை கட்டாததால் பிடுங்கப் படுகிறது
திடுக்கிட்டத் தாயும் செய்வதறியாது
கார்காலக் காற்றில் கைக் குழந்தை மரித்தது
கஞ்சி அதைச் சாய்த்து நாயும் நக்கியது
கார், பங்களா வேண்டி நச்சரிக்கும் உலகாம்
" கதவு "கி.ரா.வின், கண்கள் கலங்கியதாம்.
தேர்ந்தெடுத்து வாசித்த திரு. லட்சுமி நாராயணனுக்கு நன்றி
__. குத்தனூர் சேஷுதாஸ் 28/9/2025
No comments:
Post a Comment