உப்புமா 15
பொம்மையோ பொம்மை
வீட்டிற்கு வீடு தாவி
புன்னகைப் பூக்களை தூவி
வண்ண பொம்மைகள் கண்டேன்
விதவிதமாய் சுண்டலும் உண்டேன்..
தலையாட்டி பொம்மைக்கு தலையாட்டி
தாம்பூலம் பெற்றேன்
கை நீட்டி
படிக்கட்டுகள் ஏறிய பொம்மை
பரவசம் ஊட்டியது உண்மை
பச்சைப் புல்லும் வீட்டிற்குள்
சாமிகளெல்லாம் பாட்டுக்குள்
"மகளிர் மட்டும்" என ஒன்பது நாள்கள்
ஓடி ஓடி ஓய்ந்துவிட்டால்....
இருக்கவே இருக்கு
வலி நிவாரண தைலங்கள்
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment