சேயிழைகள் கூட்டுச் சதி
நாலு மணி அடிக்க நடையல்ல ஓட்டம்
நான்கு வீடாவது முற்றுகையிடத் திட்டம்
தோலோடு மூக்குக்கடலை, கொண்டைக்கடலை
தொட்டால் வழுக்கும் சுண்டல் வேர்க்கடலை
சேலையில் செல்பவர்க்கு இன்னும் பல உண்டாம்
சேயிழைகள் கூட்டுச்சதி " நவராத்திரி " யாம்
காலை ஆட்டியபடி காத்திருப்பார் கணவராம்
கறிவேப்பிலை, கருகிய மிளகாயே வருமாம் 😢
__. குத்தனூர் சேஷுதாஸ் 25/9/2025
No comments:
Post a Comment