நற்சுனை 14
நீ வறுமையா??
வறுமையே !
நீ ஒன்றுமில்லா வறுமை இல்லையோ?
சிவந்த நிறம் உனக்காமே!
சிவப்பை சூறையாடி வளமைக்கும் வறுமை தந்தாயோ?
இருளின் அடர் கருப்பு வேண்டாமோ?
பலரிடம் நீ நிறைவாய் இருக்க
நீ எப்படி வறுமை ஆவாய்?
கண்ணீர் குறைக்காமல் பெருக்குகிறாயே..
நீ எப்படி வறுமை ஆவாய்?
எம் மக்கள் வளம் பெற
நீ வறுமையாகிப் போனால் என்ன???
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment