மருந்தும், நோயும் ஒன்றாய்...
அரும்பு மீசையின் குறுஞ்செய்தி வந்தது
"அவசியம் வா" என இடமும் சொன்னது
வருந்தும் இடையது மறுக்கவோ முடியாது
வாய்க்கால், வயலென நாளும் வளர்வது
கரும்பு மிக செழித்து வளர்ந்திருந்தது
காயும் நிலவும் கீற்றாய்த் தெரிந்தது
மருந்தும், நோயும் ஒன்றாய் இருந்தது
மாலைக் கருக்கல் நேரமாம் அது .
__. குத்தனூர் சேஷுதாஸ் 23/9/2025
=============
உப்புமா 14
கருக்கல்
விடியாத காலையும் கருக்கல்
விடியப் போகும் மாலையும் கருக்கல்
செங்கல் நிறத்தவனை ஆதரிக்காத மங்கல்..
காலையும் மாலையும் நடத்தும் நொடிகளில் உரையாடல்..
வடக்கையும் தெற்கையும் பிரித்துவிட்டதால் திசைகளுக்குள் ஊடல்..
மயங்கும் கருக்கல் ஒன்றில்
மெல்ல மலரும் வெண் திங்கள்
அந்தியாம் இதில் மட்டும் தானே
மசால் வடை தேநீருடன்
மயக்கிடும் வெண் பொங்கல்!!!
- சாய்கழல் சங்கீதா
================
No comments:
Post a Comment