நற்சுனை 9
பிரியாப் பிரிவு
பொத்தி வச்ச
பறவைக் குஞ்சு
தனியே பறக்க
பதறுது நெஞ்சு
புலம்பல் இதோ
கவிதையாச்சு..
பள்ளியில் கல்விச் சுற்றுலா..
பறக்கப் போறேன்னு துணிச்சலோடு
பறக்க அத்தனை ஆயத்தம்
கூட்டுக்குள் செய்தது மகிழ்வோடு
திங்கள் கிளம்பி புதன் வரும்
முழுசாய் ஒரு நாள்
பிரிந்ததில்லை இருவரும்..
பித்துப் பிடித்து தாய்ப் பறவை
பிதற்றிப் பரிதவிக்குது
பிள்ளை மனம் கல்லாய்
சிறகைக் காட்டி சிரிக்குது
அலட்டாத அப்பன் பறவை
அகத்தில் ஆடிக் கிடக்குது??!!
ஒருமையாம் கூட்டுக்குள்
ஒளிக்க வேண்டுமோ சிறகுக்குள்?
ஜொலிக்க வேண்டாமா
பறந்து பரந்த பாருக்குள்!
பன்மை உலகம் காண
செல்லச் "சிட்டு"வின்
முதல் பிர(பற)யாணம்..
இனிக்க இறையெல்லாம்
வேண்டுது தாய் மனம்..
இளம் சிறகுகளை
தட்டிக் கொடுத்தது..
பாதுகாப்பு படலம்
ஓதி முடித்தது..
மெல்ல மெல்ல விரியுமே
பிரிவுப் பூ..
இதழ்களுக்கிடையே
இடைவெளிகள் அகன்று கொண்டே...
மன மலரின் அடியில்
ஒட்டியிருக்குமே அன்"பூ"...
இதழ்களின் இடைவெளிகளை அகற்றிக் கொண்டே !
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment