Sunday, September 7, 2025

*செப்டம்பர் 8 ~* *சர்வதேச எழுத்தறிவு தினம்*

 •°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°

*செப்டம்பர் 8 ~*

*சர்வதேச எழுத்தறிவு தினம்*

•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°


விலங்கோடு விலங்காய் வாழ்ந்திருந்த மனிதன் 

பரிணாம வளர்ச்சி உற்றான்.


முதுகு வளைத்து கூன் போட்டு 

நடந்த மனிதன் 

நேராய் நிமிர்ந்து நடந்தான். 


விலங்குகளை வேட்டையாட 

இரும்புக் கருவிகளைக் 

கண்டு பிடித்தான். 


சக்கரமும், தீயும், உழவும் 

அவன் வளர்ச்சிக்கு 

அடி கோலின.


நாடோடி வாழ்வைத் துறந்து நதிக்கரையோரம் 

சமூகங்கள் அமைத்தான்.


தமக்குள் கருத்துப் பரிமாற 

ஒலி வடிவத்தில் 

மொழி சமைத்தான்.


ஆதி குடிகளில் கூவல் குடியே 

தகவல் பரிமாற்றத்திற்கு 

வித்திட்டன. 


ஒலி வடிவம் நாள் போக்கில்

வரி வடிவங்களாய் 

உருவெடுத்தன.


எழுத்து வடிவம் பெற்று 

ஒவ்வொரு மொழியும் 

வளர்ச்சி உற்றன.


நவ நாகரீக கணினி உலகில் 

இன்றும் எழுதப் படிக்க தெரியாதோர் எண்ணிக்கை கோடிகளாம்.


எழுத்தறிவின்றி எந்த மனிதனும் இருந்திடக் கூடாது என 

உருவான நாளாம் இன்று 


உலக எழுத்தறிவு தினம் 

இன்றாம்.

அனைவரும் எழுத படிக்க கற்றல் நன்றாம்..


இணையம் கோலோச்சும் இந்நாளில் 

அதையும் நாம் கற்றிடுவோம் 

இணையில்லா எழுத்தறிவை பெற்று நாமும் வென்றிடுவோம்.


*உங்கள்_தோழன்_ஶ்ரீவி*

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...