தியாகிகளே மணிக்கொடி
வாராது வந்து வாய்த்த மாமணி சுதந்திரம்
வைத்துத் தட்டில் தரவிலை வெள்ளையனும்
தீராத வேட்கை கொண்டத் தியாகிகள் பலராம்
தெருவில் வந்து போராடி குருதி கொட்டினராம்
வீரத்தில் சளைத்தவர் தாமும் இல்லை என்றே
வேலுநாச்சியார் போன்றோர் களத்தில் குதித்தனரே
ஊரும், நாமும் வாழ தேசப்பற்று அவசியம்
உயர் இம் மணிக்கொடி அவர்களே வணக்கம் 🙏
வாழ்க ! நம் பாரத மண்ணில் திருநாடே !
__. குத்தனூர் சேஷுதாஸ் 15/8/2025
No comments:
Post a Comment