இயற்கை
---_--------
புழுதி படர்ந்த காற்றில்
வண்ணம் பூசி சிறகடித்தது
வண்ணத்துப்பூச்சி ஒன்று
நடை பயிற்சியாளர்கள் நகர்ந்த பின்
நடை பயின்று உலாவரும்
மாடப்புறாக்கள் தன் இணையோடு
விரைந்து செல்லும வண்டிகளிடையே
ஊர்ந்து சென்று பிழைத்தோம் என
கூட்டுக்குள் புகுந்த நத்தைகள்
ஒய்யார வீட்டருகே
தன் கூட்டை வைத்த மகிழ்ச்சியில்
உணவு தேடிச் செல்லும் காகம்
மரத்தில் கூடு எனக்கும்தான் என
இலை மூடி காற்றில் அசையும்
எறும்புகளின் இல்லங்கள்
விட்டார்களா நம்மை இவர்கள் என
சீட்டி அடித்து அதிசயிக்கும்
இரட்டை வால் குருவிகள்
மனிதன் ஆக்கிரமிப்பு செய்தாலும்
ஓயாத காற்றின் சுழற்சியாக
தன்னை மீட்டுக் கொண்டே இருக்கும்...
இயற்கை
No comments:
Post a Comment