மூன்றாவது பிறந்தநாள்
கண்டது நம் தமிழ்ச் சங்க கன்று!
எத்தனை பேரின் கனவு
நனவானதோ தெரியவில்லை இன்று!
வாசலில் சந்தன பன்னீர்!
சிலர் கண்களில் ஆனந்த கண்ணீர்!
தலைமுறைகளை இணைத்த நிகழ்ச்சி! நெஞ்சமெல்லாம்
நெகிழ்ச்சி!
வீட்டில் முடங்கிய திறமை..
வெளிச்சத்திற்கு வந்தது .....அருமை!
தமிழ்ச்சங்கத்திற்கென ஒரு பாடல் ..தொட்டது பல இதயம்!
இசையமைத்தவரும் பாடியவர்களும் வரிகளுக்கு உயிர் கொடுத்த மாயம்!
கவிதைகளை அள்ளி வந்த கவிஞர்கள்!
கருத்து விதைகளையும்
தூவி சென்ற வித்த(து)கர்கள்!
பட்டிமண்டபத்தில்
இரு அணி போர் வீரர்களின் மோதல்!
வெள்ளை கொடி
காண்பித்த நடுவருக்கு
கண்ணதாசன்,வாலி
இருவர் மீதும் காதல்!
பார்த்தசாரதி சுடலை
சுடலை சுட்டதை பார்த்த சாரதி
மூவரையும் காவல் அதிகாரி விசாரிக்காமல் விடலை!
மூன்று சிறு கடலை!
நால்வரும் நடிப்பில் மலைக்க வைத்த மலை!
தோசைக்கு சீனி ...
நடிகர்கள் எந்த நாடகக் கம்பெனி?😀
இருவரும் போட்டனர் சிரிக்க நல்ல தீனி..
கல்யாணிக்கு கல்யாணம்...
கல்யாண் ஜூவல்லர்ஸில் தங்கம்
வாங்க முடியாமல் போனாலும்
கல்யாணி கவரிங்கிலாவது வாங்கி
தமிழ்த் தங்கத்துக்கு
நகை போட வேண்டும்
நம் சங்கம்😁
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!
குட்டி மயில்கள் முதல்
பாட்டி மயில்கள் வரை..
பூர்வாவில் நடன மயில்களுக்கு இல்லை
திண்டாட்டம்!
இசையரசர்களும் இசையரசிகளும்
சொற்களை மெல்லாமல் அசைத்த மெல்லிசை..
அவையோரை கட்டி இழுத்த இசை விசை!
வலையொளி இன்று எழுப்பியது முதல் ஒலி!
புத்தகங்களுக்கு இல்லை ஈடு..
மூன்று ஆசிரியர்களின் ஈடுபாட்டால்
புத்தகங்கள் வெளியீடு!
நன்றி உரைத்த நாகராஜ் ஐயா..
உங்க நன்றியுரை
புது தினுசய்யா..
மகாலட்சுமியின் தொகுப்பு..
இதனால் நிகழ்ச்சி நகர்ந்தது..சிறப்பு!
நான்கு சிறப்பு விருந்தினர்..
சிரிப்பில் ஆழ்த்திய இருவர்..
வலையொளியில் ஆழ்த்த ஒருவர்...
நால்வரில் அறிவுரை தந்தவரே அகவையில் பெரியவர்..
மூன்றெழுத்து "நன்றி"..
மூன்று தலைவர்களுக்கும்
மூச்சிரைக்க ஓடி களைத்தவர்களுக்கும்
மூவாயிரம் முறை...
கை தட்டி பாராட்டியவர்களுக்கு
பத்தாயிரம் முறை..
ஊக்கமளித்தோருக்கு
உயிருள்ளவரை!
- சாய்கழல் சங்கீதா
***************
எம்ஜிஆர் ஜானகி
கல்லூரியில்
ஒரு விழா.
எங்கள்
பாரதி தமிழ்ச்சங்கம்
கண்ட
ஈராண்டு
நிறை விழா.
அனைவரும்
அகம் மகிழ்ந்த
திருவிழா.
எட்டிலிருந்து
எண்பதும்
அதற்கு மேலும்
ஆடிக் கொண்டாடிய
பெருவிழா.
விழி, செவியன்றி
வயிற்றுக்கும் ஈந்த
நன் விழா.
மேலும்
பதின் ஆயிரம்
விழாக்கள்
காண
வாழ்த்துகள்.
- முகம்மது சுலைமான்
No comments:
Post a Comment