மூன்றாம் ஆண்டில்
மகாகவியின் பெயரோடு
அடியெடுத்து வைத்தது
நம் தமிழ் சங்கம்
ஒருவர் பாடல் எழுத
ஒருவர் இசையமைக்க
இருவர் இணைந்து பாட
அழகாக துவங்கியது விழா
இயல் இசை நாடகம்
சிறப்பு விருந்தினர் வருகை
தமிழ்ச்சங்கம் படைத்த விருந்தும்
இயல் இசை நாடகம்
மகாகவியின் நல் வரிகள்
கவிஞர்களின் பாவாக
கவியரங்கில் அரங்கேற
களைகட்டியது அரங்கம்
தமிழோடு விளையாடி
நாடகத்தில் புகுந்தாடி
அசத்தினர் சிறுவர்கள்
சிலிர்த்தது அரங்கம்
மெல்லிசை பாடகர்கள்
இன்குரலால் மயக்க
இசை மழையில்
நனைந்தது தமிழ் உலகம்
பட்டி மன்றத்தில்...
அணி பிரிந்து வாதாடினாலும்
இணைந்து சுவையேற்ற
நடுவரின் பேச்சும் சுவை கூட்ட
இரசித்து போற்றியது அவை
துள்ளி ஆடும் சிறாரோடு
துடிப்பாக ஆடிய மகளிர்
பயிற்சி கொடுத்தவரின் நடனத்துடன்
அதிர்ந்தது மேடை மட்டுமல்ல...
கதைகள் கவிதைகள் என
முத்து முத்தாக நூல்கள்
நூல் வெளியீட்டுடன்
மிளிர்ந்தது விழா
வலையொலியும்
பாரதி விருதுகளும்
அணி சேர்க்க
ஒளிர்ந்தது தமிழ் சங்கம்
பூமாலையாக நிகழ்ச்சிகள் தொகுத்த
தொகுப்பாளரின் சொல்வளம்
முத்தாய்ப்பாக நன்றியுரைத்தவரால்
நிறைவடைந்தது விழா
திரைக்கு பின்னால்
ஒலி ஒளி உணவு என
ஓடியாடிய நல்லிதயங்களால்
மிளிர்ந்தது கொண்டாட்டம்
தலைவர்களின் விடாமுயற்சி
அயற்சி இல்லா உழைப்பு
உறுப்பினர்களின் ஊக்கம்
இவற்றால்
தமிழ் சங்கம் எட்டியதோ அடுத்த படி
தமிழ் அன்னை ஆசிபெற்று
மேலும் விழாக்கள் சிறக்கட்டும்
உறுப்பினர்கள் உயரங்கள் தொடட்டும்
தமிழ்ச்சங்கம் துருவ நட்சத்திரமாக வழிகாட்டும் 🙏
- அமுதவல்லி
********************
பட்டை கிளப்பிய விழா
இரண்டாம் ஆண்டு நிறைவு விழா இன்று
எம் பாரதி தமிழ்ச் சங்கக் குழந்தைக்கு
திரண்டது பூர்வா தமிழார்வம் எல்லாம்
திகைக்க வழிந்த விழா அரங்கமாம்
கரைகண்ட சிறப்பு விருந்தினராம் நால்வர்
காண வந்தாரை வாய் பிளக்க வைத்தனர்
முரட்டு சுடலை, பிறரை மறக்க முடியாது
மூத்த குடிகள் பொழிந்த இன்னிசை ஓயாது
அரங்கம் அது சூடாக நடனம் இருந்தது
அகவை எண்களும் காணாமல் போனது
திரையில் அன்று தெளித்த தத்துவ முத்துக்கள்
தெளிந்தோம் கவியரசும், வாலியும் நம் சொத்துக்கள்
கருத்தாழக் கவியரங்கம், நன்றி உரையும்
கண்டோம் ஒரு பூனை பால் குடித்ததையும்
கரண்டி கரண்டியாய் சாம்பார், தயிர் சாதம்
கம்பாஸால் வரைந்த சப்பாத்தி, குருமாவும்.
" சுருக்கமாக பட்டை கிளப்பியது "
__. குத்தனூர் சேஷுதாஸ் 27/7/2025
**************************
No comments:
Post a Comment