மண் பயனுற வேண்டும்
விடுமுறைக்கு ரயிலேறி
ஊருவரும் செல்லப் பேரான்டி
நீ வரும் வழியில்
பார்த்த காட்சி
சொல்லு பேரான்டி
அடுக்கடுக்கா
பெட்டி போல
வீடு பார்த்தியா ?
அத தாங்கி நிற்கும்
அழகு பெற்ற
நிலத்த பார்த்தியா ?
தலைக்கு மேலே
உசந்து போகும்
புகைக்கூண்டு பார்த்தியா?
அதிலிருந்த அமிழக்கழிவின்
வாசம் பிடிச்சியா?
அக்கழிவு நீரில
கருகிப்போன தாய பார்த்தியா?
பூமித்தாய பார்த்தியா?
கொஞ்ச நேரம் பொறுத்திடு கண்ணு
நம்ம ஊரு வந்துடும் பக்கமா
கண் குளிர பார்க்கலாம்
பச்சைப் பயிரெல்லாம் மொத்தமா
பாத்தி கட்டி உழவு செஞ்சு
மண்ண நானும் பார்த்ததால
பாட்டி வீடு நீயும் வந்து
சப்புகொட்டி சாப்பிடலாம்
பலவிதமான சோற
உருளை கருணை அவரையெல்லாம்
உனக்கு பிடிச்ச காயி
மண்ணில் உருவாக்க நானிடுவேன்
இயற்கை உரம் சாமி.
செயற்கை உரம் நெகிழியெல்லாம்
மண்ணுக்காகும் நோயி
இதை புரிஞ்சு நீயும் வளர்ந்திடணும்
தாயின் மனசுக்கோணாம நீயி
பூமித்தாயின் மனசு கோணாம நீயி.
படிச்சபுள்ள உனக்கு தெரியும்
மண்ணின் வளம் காக்க
பார்த்து நீயும் நடந்துக்க
நம் மனித நலம் செழிக்க.
ஏர்பூட்டி உழவு செய்யும்
எங்க செல்ல தாத்தா
ஏழூறு தாண்டி வரேன்
உன் முகத்த பார்க்க
எப்போதும் நினைவிருக்கும்
நீ சொன்ன சேதி
நம் மண்ணபத்தி நீ சொன்ன சேதி
பயிறும் மண்ணும் பயனுற
இயற்கை வேளாண் வேணும்
இளைப்பாற மரங்கள் வேணும்
நஞ்சற்ற உணவு வேணும்
நம்மாழ்வார் சொல் வேணும்
என்னைக்குமே வேண்டாம்
அமிலக்கழிவும் நெகிழிக்கழிவும்
நீ சொன்ன வார்த்தைகள் தாத்தா
நெக்குருட்டி வச்சிருக்கேன் நெஞ்சுக்குள்ள
இன்னுங்கொஞ்சம்
என் கருத்து சொல்லிடுறேன்
உன் இருகாது குளிர கேட்டுக்கோ
உணவு கல்வி மனித உயிர்கள்
அனைத்திற்கும் கிடைத்திடணும்
நல் உழைப்பினிலே
பிரிவினைகள் அகன்றிடணும்
காற்றும் நீரும் கலங்கமற்று
காசின்றி கிடைத்திடணும்
காடு கடல் வான்வாழ் உயிர்கள்
களிப்போடு வாழ்ந்திடணும்
கண்ணுக்கு புலனாகா
உயிர்காக்கும் நுண்ணுயிர்கள்
கல்லறையில் உறங்கிடணும்
அணு ஆயுத பீரங்கி
அன்பின்முன் புதைஞ்சிடணும்
தொழில்நுட்ப வளர்ச்சியிலே
மக்கள் தொல்லையெல்லாம்
ஒழிஞ்சிடணும்
அறநெறிப் பாதையிலே
அவனியெல்லாம் செழித்திடணும்
உன் ஆசைப்பேரான்டி நான்
இதிலே அமைதியாய் வாழ்ந்திடணும்
கலங்காம நீ இரு தாத்தா
மண்பயனுற வாழ்ந்திடுவேன்
நம் சந்ததிய காத்திடுவேன்.
மண் பயனுற வேண்டும்
விடுமுறைக்கு ரயிலேறி
ஊருவரும் செல்லப் பேரான்டி
நீ வரும் வழியில்
பார்த்த காட்சி
சொல்லு பேரான்டி
அடுக்கடுக்கா
பெட்டி போல
வீடு பார்த்தியா ?
அத தாங்கி நிற்கும்
அழகு பெத்த
நிலத்த பார்த்தியா ?
தலைக்கு மேலே
உசந்து போகும்
புகைக்கூண்டு பார்த்தியா?
அதிலிருந்த அமிழக்கழிவின்
வாசம் பிடிச்சியா?
அக்கழிவு நீரில
கருகிப்போன தாய பார்த்தியா?
பூமித்தாய பார்த்தியா?
கொஞ்ச நேரம் பொறுத்திடு கண்ணு
நம்ம ஊரு வந்துடும் பக்கமா
கண் குளிர பார்க்கலாம்
பச்சைப் பயிரெல்லாம் மொத்தமா
பாத்தி கட்டி உழவு செஞ்சு
மண்ண நானும் பார்த்ததால
பாட்டி வீடு நீயும் வந்து
சப்புகொட்டி சாப்பிடலாம்
பலவிதமான சோற
உருளை கருணை அவரையெல்லாம்
உனக்கு பிடிச்ச காயி
மண்ணில் உருவாக்க நானிடுவேன்
இயற்கை உரம் சாமி.
செயற்கை உரம் நெகிழியெல்லாம்
மண்ணுக்காகும் நோயி
இதை புரிஞ்சு நீயும் வளர்ந்திடணும்
தாயின் மனசுக்கோணாம நீயி
பூமித்தாயின் மனசு கோணாம நீயி.
படிச்சபுள்ள உனக்கு தெரியும்
மண்ணின் வளம் காக்க
பார்த்து நீயும் நடந்துக்க
நம் மனித நலம் செழிக்க.
ஏர்பூட்டி உழவு செய்யும்
எங்க செல்ல தாத்தா
ஏழூறு தாண்டி வரேன்
உன் முகத்த பார்க்க
எப்போதும் நினைவிருக்கும்
நீ சொன்ன சேதி
நம் மண்ணபத்தி நீ சொன்ன சேதி
பயிறும் மண்ணும் பயனுற
இயற்கை வேளாண் வேணும்
இளைப்பாற மரங்கள் வேணும்
நஞ்சற்ற உணவு வேணும்
நம்மாழ்வார் சொல் வேணும்
என்னைக்குமே வேண்டாம்
அமிலக்கழிவும் நெகிழிக்கழிவும்
நீ சொன்ன வார்த்தைகள் தாத்தா
நெக்குருட்டி வச்சிருக்கேன் நெஞ்சுக்குள்ள
இன்னுங்கொஞ்சம்
என் கருத்து சொல்லிடுறேன்
உன் இருகாது குளிர கேட்டுக்கோ
உணவு கல்வி மனித உயிர்கள்
அனைத்திற்கும் கிடைத்திடணும்
நல் உழைப்பினிலே
பிரிவினைகள் அகன்றிடணும்
காற்றும் நீரும் கலங்கமற்று
காசின்றி கிடைத்திடணும்
காடு கடல் வான்வாழ் உயிர்கள்
களிப்போடு வாழ்ந்திடணும்
கண்ணுக்கு புலனாகா
உயிர்காக்கும் நுண்ணுயிர்கள்
கல்லறையில் உறங்கிடணும்
அணு ஆயுத பீரங்கி
அன்பின்முன் புதைஞ்சிடணும்
தொழில்நுட்ப வளர்ச்சியிலே
மக்கள் தொல்லையெல்லாம்
ஒழிஞ்சிடணும்
அறநெறிப் பாதையிலே
அவனியெல்லாம் செழித்திடணும்
உன் ஆசைப்பேரான்டி நான்
இதிலே அமைதியாய் வாழ்ந்திடணும்
கலங்காம நீ இரு தாத்தா
மண்பயனுற வாழ்ந்திடுவேன்
நம் சந்ததிய காத்திடுவேன்.
No comments:
Post a Comment