Friday, July 25, 2025

நட்பு:

 நட்பு:


நட்பிற்குப் பாலமிட்டது கோப்பெருஞ்சோழன் பிசிராந்தை -நட்பு!


நட்பிற்கு உயிரோட்டமிட்டோர் பாரி, கபிலர்!


நட்பினுக்கு இலக்கியம் கண்டோர் அதியன், ஒளவை!


நண்பா! உன்னை உன்னிடம் பார்ப்பதைவிட உவமைகளில் அதிகம் உன்னைக் காண்கின்றேன்!


ஆதலின் நண்பா ! நமக்குள் உருவமே வேண்டாம்! அருவமாய் அமைந்து ஆளுவோம் உலகை! 

தமிழ் உலகை,,நாளை வாராய்!


..அக்ரி சா.இராஜா முகமது


****************

புராண, இதிகாசங்களில் கண்ட


"எடுக்கவோ கோர்க்கவோ" 

என்று கேட்ட 

துரியோதனன் கர்ணன் நட்பு.


பிடி அவல் கேட்ட கண்ணன் 

குசேலர் நட்பு. 


"மச்சான் வாடா பார்த்துக்கலாம்"

என்று தோள் கொடுக்கும்

இக்கால நட்பு.


நட்புக்கு என்றும் 

அழிவும் இல்லை 

முடிவும் இல்லை.


- முகம்மது சுலைமான்,


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...