நட்பு:
நட்பிற்குப் பாலமிட்டது கோப்பெருஞ்சோழன் பிசிராந்தை -நட்பு!
நட்பிற்கு உயிரோட்டமிட்டோர் பாரி, கபிலர்!
நட்பினுக்கு இலக்கியம் கண்டோர் அதியன், ஒளவை!
நண்பா! உன்னை உன்னிடம் பார்ப்பதைவிட உவமைகளில் அதிகம் உன்னைக் காண்கின்றேன்!
ஆதலின் நண்பா ! நமக்குள் உருவமே வேண்டாம்! அருவமாய் அமைந்து ஆளுவோம் உலகை!
தமிழ் உலகை,,நாளை வாராய்!
..அக்ரி சா.இராஜா முகமது
****************
புராண, இதிகாசங்களில் கண்ட
"எடுக்கவோ கோர்க்கவோ"
என்று கேட்ட
துரியோதனன் கர்ணன் நட்பு.
பிடி அவல் கேட்ட கண்ணன்
குசேலர் நட்பு.
"மச்சான் வாடா பார்த்துக்கலாம்"
என்று தோள் கொடுக்கும்
இக்கால நட்பு.
நட்புக்கு என்றும்
அழிவும் இல்லை
முடிவும் இல்லை.
- முகம்மது சுலைமான்,
No comments:
Post a Comment