மழைக்கு அஞ்சியோருக்கு
அடைக்கலம் தந்து ஆசையாய்
நனைந்தது குடை!
வெயிலுக்கு அஞ்சியோரின்
தோள்கள் மேலேறி
வெளிச்சத்தை இரசித்தது
குடை!
------------------
நனைய வைக்கும் குடைகள் இரண்டாம்...
ஓட்டையான குடை
ஓட்டையாக்கப்பட்ட குடை( வானம்)..
மாயவன் பிடித்தது மலை குடை
மலையைத் தூக்குமோ
குண்டூசிக் குடை?
-----------------------
பறக்கவிட்டவள் இங்கிருக்க யார் முகவரியைத் தேடி அலைகிறது குடை?
- சாய்கழல் சங்கீதா
**********************
அருமை👍👍
குடைகள் பல விதம்
ஒவ்வொன்றும் ஒரு
விதம்.
வெயிலோ மழையோ
அடைக்கலம் தரும் குடை.
சிறிய ஓட்டைகளுக்குப்
பொறுப்புத்துறப்பு அறிவிக்கும் குடை.
நாட்டை ஆண்ட பெருமன்னரின் ஆளுமைச்சின்னமும் ஒரு வெண்கொற்றக் குடையே.
தெய்வ மூர்த்திகளும்
வீதி உலா வரும்போதும் அடைக்கலம் தருவதும் குடையே.
பல நடனங்களில் ஊன்றி(prop) ஆக பயன்படுத்தப்படுவதும்
குடையே.
சுயமாக உணவை எடுத்து உண்ணும்
மண விருந்துகளில் பல வகை உணவு வகைகளை வரிசைப்படுத்தி வைப்பதும் வண்ண வண்ண குடைகளின் கீழே.
முதியவர்கள் அவசரத்தில் கைத்தடிக்குப் பதிலாக
எடுத்துச்சென்றாலும்
முணுமுணுக்காமல்
ஊன்றுகோலாவதும்
ஒரு குடைதான் .
வான் குடைப் பதாதிகளின் *உயிர் காப்பதும் குடையே.
இவ்வளவு பெருமைகள் இருப்பினும் கர்வம் இன்றி கதவின் பின்னே தொங்கும் குடை!
*. வான் குடைப்பதாதி- paratroopers
- மோகன்
*****************************
இயற்கையின் கொடை......
மிளகாய்க்கும்
குடை.....
😊 சாயி
****************************
வண்ண வண்ணக் குடைகளாயினும்..
"குடைபிடிப்பதே மாமூலாகிவிட்டால் " ..
இந்த 'கவரின்' நிழலே,
நிரப்பிடுமே கறுப்பு கலரு..⚫💵
பின்பு மெல்லமெல்ல மாறிடுமே,
ஏழையின் கைசேர வெள்ளைகலரு .. 💵
- இலாவண்யா
No comments:
Post a Comment