உற்சவ மூர்த்தி
உலா வரும்போது
ஊர்வலத்தில் குடை.
கொற்றவன்
அரசவையிலோ
வெண்கொற்றக் குடை.
முன் பாமரர்கள் கையிலோ
பனையோலைக் குடை.
பின் மஸ்லின் துணியிலே
பரந்து விரிந்த குடை.
பாவையருக்குப்
பூக்கள் வரைந்து
பல வண்ணங்களில்
அழகழகாய்க் குடை.
கையில் மடித்துப் பாங்காய்
பையில் வைக்கும் குடை.
வெயிலில்
கடை விரிக்கும்
மாந்தருக்கோ
விளம்பரத்தோடு குடை.
குடையே உன்
பெருமையை
என் சொல்வேன்.
- முகம்மது சுலைமான்,
***************************
குடை
--------
மனிதனின்
கைப்பிடிக்குள் குடை...
மழை கண்டு
தோகை விரிக்கும்
வெயிலில்
மலர்ந்து சிரிக்கும்
ஒரு குடை கீழ்
என்றே
எத்தனை கதைகள் ..
எத்தனை துயர்கள்...
என்றாலும்
ஏதோ ஒரு
குடையின் கைப்பிடிக்குள்
சிக்கித் திண்டாடும்
மனிதன்...
-அமுதவல்லி
*********************
நான்தான் உன் குடை கம்பி
தம்பி என் தங்க கம்பி
உயர்த்திப் பிடி என்னை நம்பி
மழைநீர் போகும் உன் கால் மட்டும் அலம்பி
உன் தலை என்னிடம் பத்திரமாக உள்ளது அம்பி
- ஸ்ரீவித்யா
****************
-
No comments:
Post a Comment