ஈட்டிக்காரன்..
ஈதலா ?
ஈட்டியா?
அடகு வைக்க ஏதுமில்லாமல்
வானத்திடம் கெஞ்சி மழையைக் கடனாகக் கேட்டோம்
மேக அலமாரிகளிலிருந்து
மழைப்பணத்தைக் கொடுத்துவிட்டு
அனல் தடி கொண்டு
கந்து வட்டியுடன் அசலையும்
மிரட்டி வாங்கிவிட்டான்
ஈட்டிக்காரன்..
வெயில் தாங்க முடியல...🔥
- சாய்கழல் சங்கீதா
*************
*தேவை ஈட்டிக்காரன்…..*
🌞 “நிழலின் அருமை வெயிலில் தான் புரியும்!”
💔 “வெறுப்பின் வலியில் தான் அன்பின் நெஞ்சம் படைக்கிறது!”
🌑 “இருட்டு இருந்தால்தான் ஒளியின் பெருமை தெரியும்.”
😷 “உறைபனியில் தான் உடலின் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் தெரிகிறது.”
🎶 “மௌனம் தான் இசையின் அழகையும் அர்த்தத்தையும் சொல்வதற்கான இடத்தை தருகிறது.”
*🪙 “ஈட்டிக்காரன் இருந்தால்தான், ஈதலின் தூய்மை புரியும்!”*
📜
வாழ்க்கையில் நிறை எதுவும் தனித்து அடையாளம் காட்டாது.
அதன் எதிர்மையான ஒன்று தோன்றினால்தான்
அது எவ்வளவு விலைமதிப்புடையதென்று நமக்கு உணர முடிகிறது.
-
- தியாகராஜன்
******************
கடன் கேட்டார்
அள்ளிக் கொட்டினேன்
சேமித்தால் குடிநீர்
வீணடித்தால் கண்ணீர்
மரங்கள் வெட்டி
வாகனங்கள் ஓட்டி
அனலைக் கூட்டி
அடிக்கிறாய் லூட்டி
பழிச் சொல் எனக்கு ஈட்டி 👊
- அமுதவல்லி
No comments:
Post a Comment