Monday, June 9, 2025

மூன்று பெண்களுக்கும் ஒரே பானையா?

 



மூன்று பெண்களுக்கும் ஒரே பானையா?

சங்கடமய்யா!

ஆடி ஆடிப் போட்டுடைத்தால்

பானையோடு நீரும் வீண்.-என்பவர் 

விவரமறியா விடலகள்.


மூன்று முடிச்சு போட்டவர்களுக்குத் தெரியும், இவர்கள்

குடும்பச் சுமையை தம்மோடு தலைமை தாங்கியும், தோள் கொடுத்தும்இடுப்பொடிய உழைத்தும் தாங்கும் பாக்கியசாலி பானை தாங்கிகள் என்று.


சுமைதாங்கிகள் வெறும் சுமைகளைத்

தாங்கும்.

இவர்களோ  சும்மாடு கூட. இல்லாது 

சுமந்து சுமந்து வளமும் சேர்ப்பர்.


பானையை சரியாக கையாளவிட்டால் உருளும் அல்லது உடையும். 

தலை, தோள், இடுப்பு எனப் பலவாறும் ,பானை பிடிக்கும் இவர்களைக் கைப் பிடித்தவர்தாம்

பாக்கியசாலிகளோ!


- மோகன்

**********************

தலையில் இருந்து எடுத்தால்

தோளில் நிற்கிறது

தோளை விட்டு அகற்றினால்

இடுப்பில் அமர்கிறது


சுமையில்லா வாழ்க்கை 

எவருக்கும் அமைவதில்லை 

இருப்பதும் இல்லாததும் 

காணும் இடம் பொறுத்து


தலை சுமந்தாலும்

தோள் தாங்கினாலும்

இடுப்பு பற்றினாலும்

சுமை சுமை தான்


வாழ்க்கை சித்திரத்தின் 

மாயை விளக்கி

பானை வழி ஞானம் ஊட்டும்

வண்ணச் சித்திரம்


- அமுதவல்லி

************************

மண்பானை ஆண்கள் 


கலயமாம் மண்பானை ஆண்கள் பாவம் 

   காரிகைகள் மூவர் கைகளில் உள்ளோம் 


"தலை"யில் அவனை வைத்துத் "தாயாய்" கூத்தாடும்

   "தன் பிள்ளை போலில்லை தரணியில்" என்னும் 


வலையில் சிக்க வைத்து "காதலி"யாய் வாட்டும் 

   வாய்ப்பு வர "தோளில்" வைத்துக் கையும் போடும் 


தொலைந்து போகட்டுமெனக் கழுத்தை நீட்டும் 

   துடி "இடையில்" வைக்க " மனைவி "யாய் முயலும்.


__. குத்தனூர் சேஷுதாஸ் 10/6/2025


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...