கரையும் உபதேசம்
"தொந்தி இல்லை, துரும்பாய் இளைப்பில்லை
துறுதுறுவென நீங்கள் எப்படி ஒரே அளவில்?"
வந்தமர்ந்த காக்கையின் வாயைக் கிளரினேன்
வரிசையாக உபதேசம் வழங்கப் பெற்றேன்
" சந்திரன் விடை பெறும் வேளையில் விழிப்போம்
சாமி வரும் பிரம்ம முஹூர்த்தத்தில் களிப்போம்
சொந்தங்கள் அவை சூழ இரை தேடிப் போவோம்
சொர்க்கமாம் சேர்ந்துண்ணல் நாளும் துய்ப்போம்
பந்தியில் உண்ணும் போது பொத்தான் தளராது
பசி அடங்கிய உடன் உண்பதும் தொடராது
சந்ததிக்கும் தருவோம் தக்க அந்தப் பயிற்சி
தாய் என்றும் வாயில் ஊட்ட மாட்டாள் பூச்சி
அந்தி வந்த பின் திரும்புவோம் கூடும்
அப்புறம் சுற்ற மாட்டோம் ரதியோடும்
இந்திர விருந்தெனினும் இரவில் மறுப்போம்
எட்டு மணி அடிக்க எல்லாரும் படுப்போம்."
__. குத்தனூர் சேஷுதாஸ் 28/6/2025
No comments:
Post a Comment