தந்தை கூறும் அறிவுரைகள் எட்டிக் காயாய்க் கசந்திடுமே!
விந்தை மனிதர் மனங்களிலே வில்லனாய்
அவரும் தெரிவாரே!
சிந்தை முழுதும்
வெறுப்புணர்வு கொழுந்து விட்டு எரிந்திடுமே!
தந்தையாய் அவரும் மாறுங் கால் தந்தையின் அருமை புரிந்திடுமே!!
மறைந்த பிறகு
ஊர் மெச்ச காரியங்கள் செய்வோரே!
இருக்கும் போதே
மதித்திடுங்கள்.
அன்பாய் நீங்கள் நடந்திடுங்கள்!
தந்தையர் தின
நல் வாழ்த்துகள்!
- ஸ்ரீவி
***************************
இன்று தந்தையர் தினம்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே
என்ற பாரதி இருவரையும் சம நோக்கில் கண்டார்.
இந்த இரட்டைக்குதிரைகள் பூட்டிய சாரட்டில் பயணித்துதானே வாழக்கைப்பாதையைத் துவங்குகிறோம்.
தாய் கருவில் சுமக்கிறாள்
தந்தை தோள்களில்.
தந்தை காட்டும் கண்டிப்பு, தாம் பட்ட இன்னல்களை மகவு தவிர்க்க வேண்டுமே என்ற கரிசனம்.
மகனுக்குத்தந்தை ஒரு புதிர்
அவன் தந்தை ஆனவுடன்
புதிர்விளங்கும்.
இன்று தந்தை தாய் இருவரையும் போற்றுவோம்.
-மோகன்
***********************
No comments:
Post a Comment