இழப்பின் வலி...
மறக்கத் தான் நினைக்கிறேன்
மறக்க வேண்டும்
என்பதையே
மறந்து விடுகிறேன்..
சிரிக்கத் தான் நினைக்கிறேன்
சிரிப்பின் சத்தத்தை
சிதைத்து விடுகிறேன்..
அழத் தான் நினைக்கிறேன்
கண்ணீர்க் கிணறுகளைக்
காய விடுகிறேன்
உறங்கத் தான் நினைக்கிறேன்
உறக்கத்துள் சிக்காமல் உயிர்த்து விடுகிறேன்
பறக்கத் தான் நினைக்கிறேன்
சிறகுகளை கூட்டுக்குள்
பதுக்கி வைக்கிறேன்
நிறுத்தத் தான் நினைக்கிறேன்
நிறுத்தங்களின் முகவரி
தொலைத்து
நினைவுகளில் நித்தம்
நிலைத்து விடுகிறேன்.
- சாய்கழல் சங்கீதா
*****************
இழப்பும் வலியும்
ஒருக்காலும்வலிமையானதல்ல
வியர்த்தால் பலம் பெறும்
எதிர்த்தால் புலம் பெயரும்
கண்கள் காண்பது முன்புறமே
முன்னானவைகளையே நோக்குவோம்
வலியில் புன்முறுவல்தான்
வலியை வறுத்தெடுக்கும்
சிதைத்து விடும் சிறப்பாகும்
கண்ணீர் ஒரு வரப்பிரசாதம்
துளிகளாகலாம்
கடலாக மட்டும்விட்டு விட வேண்டாம்
நாளை வாழ்வை இறைவனுக்களித்தது
நன்கு கண்ணுறங்கி
நலம்பெற வாழ்த்துக்கள்
நிறுத்தங்களின் முகவரி
நம்மிடம் வேண்டாம்,
நிறுத்தவோ,
பதுக்கவோ வேண்டாம்
நாதனிடம் விடுவோம்
அதன் முடிவை!
பரமஞானி
No comments:
Post a Comment