தாயின் மனதில் நிரந்நரமாய் ஒட்டியது..
உதடுகள் ஒட்டாமல் தன் மழலை சொன்ன முதல்
"அம்மா"..
அம்மா!
நமக்காகவே படைக்கப்பட்ட பிரத்யேக சொந்தம்..
நித்தம் தொடரும்
இந்தப் புனித பந்தம்!
அன்னையர் தின வாழ்த்துகள்!💐
- சாய்கழல் சங்கீதா
*******************
தரணி போற்றும் உன்னத உறவு : தாய்
அரணாய் நின்று காக்கும் உறவு:
தாய்
உரமாய் மாறி வளர்க்கும் உறவு:
தாய்
குழுவில் உள்ள அன்னையருக்கு
அன்னையர் தின நல் வாழ்த்துகள்
ஸ்ரீவி
***********************
௮ன்னையர் தின வாழ்த்துக்களை
ஆண்டவனுக்கே ௮னுப்பி வைத்தேன்.
௮ங்கேயி௫ந்து வந்தது ஒ௫ return message
--- "understood not" ௭ன்று.
ஆம். முதலும் இன்றி முடிவும் இல்லாத ஆண்டவனுக்கு ௭ங்கே கிடைத்தி௫க்கும் ௮ம்மாவின் ௮ரவணைப்பின் சுகம்?
அதை ௮வன் ௨ணர்ந்தி௫ந்தால்
௮ம்மா ௭ன்ற ௮ரிய ஜன்மத்திற்காவது
(நபர்) 500 வ௫டங்கள் ஆக்கியி௫ப்பான் ஆயுளை.
மனித வர்க்கத்தின்
முதல் மரியாதையே ௮ன்னையர்க்குத்
தான்.🌹
ரவி
***********************
அன்னையால் மட்டுமே
கல்லாம் என் அப்பனைக் கண்களால் கரைத்தாய்
கழனி, களத்துமேட்டில் காதலை வளர்த்தாய்
எல்லார் முன் மணநாள் ஏன் தலை குனிந்தாய் ?
எல்லாம் புதிதுபோல் ஏமாற்றத் துணிந்தாய்
நல்வினை செய்தேன் உன் கருவறை புகுந்தேன்
நன்கு கொழுகொழுவென உன்னால் வளர்ந்தேன்
பல்லால் நான் கடித்தும் பால் தர மறுக்கவில்லை
" படவா பயலே " என கொஞ்சாத நாளில்லை
கொல்லவில்லை நெல் தந்து என் தங்கையை
கொடும் பாவம் அதைச் செய்யவும் இல்லை
வெல்லமாய் உன் மருமகள் எனக்கு இனித்தாள்
வேப்பங்காயாய் ஏனோ உனக்கவள் கசந்தாள் !
தொல்லை தருபவனை எல்லா உறவும் துரத்தும்
தோட்டம் வரச் சொல்லி தாயுறவு சோறு போடும்
மல்லிகை மணப்பது கொல்லையில் மட்டுமே
மாவுலகில் உயிர்கள் எல்லாம் உன்னால் மட்டுமே.
__ குத்தனூர் சேஷுதாஸ்
*****************
உயிர் ஒன்று
கருவறையில் துளிர்க்க
குருதியை அமுதாக்கி
கருவிற்கு உரு தந்தாய்
அழுத குழவிக்கு அமுதூட்டி
மடியில் அணைத்து
காலடி வைக்கும் வரை
அன்பால் அரவணைத்தாய்
புது உலகில் கிள்ளை வாழ
ஓயாது எண்ணினாய்
ஊனும் உயிரும்
பிள்ளைக்கு அர்ப்பணித்தாய்
உலகம் அது
கைவசம் ஆனவுடன்
விரலை விட்டு
தன் வானம் பறக்க செய்தாய்
பெற்றால் தான் பிள்ளையா என
தாய்மை அன்புடன்
வாழ்ந்திடுவோர் பலர்
விரலை விட இயலா பிள்ளையை
அணைத்து இணைத்து
அன்பை பொழியும்
தாய்மார்கள் பலர்
தாயின்றி யாருமில்லை
தாய்மையின்றி உலக மில்லை
ஒருநாள் போதாது தாயைக் கொண்டாட
அன்னையை
தினம் கொண்டாடுவோர்
இன்றும் கொண்டாடுங்கள்
கொண்டாட மறந்தோர்
இன்று முதல் கொண்டாடுங்கள்
அன்னையர் தின வாழ்த்துகள் !!!
- அமுதவல்லி
No comments:
Post a Comment