முதலில் மகவைத் தாய் ஸ்பரிசித்த உணர்வு
முன் அறியாளை மணநாள் தொட்ட அவ்வுணர்வு
புதையல் என் தோட்டத்தில் கண்டெடுத்த உணர்வு
புல்வெளியில் புல்லாங்குழலில் பூரித்த உணர்வு
துதிக்கும் தமிழன்னை தோன்றிய இன்னுணர்வு
துள்ளி வரும் கடல் அலை கால் வாரும் உணர்வு
பதியம் போட்ட கிளையது துளிர் விட்ட உணர்வு
பள்ளி இறுதித் தேர்வில் முதல் வந்த உணர்வு
அதியமான் தர நெல்லிக்கனி ஔவையின் உணர்வு
ஆற்றில் மீனாய் அடித்துச் செல்லும் உணர்வு
புது வானில் சிறு பறவை சிறகடித்த உணர்வு
பூஞ்சோலையில் நானும் ஒரு பூவான உணர்வு
இது எல்லாம் ஒன்றாகச் சேர்ந்த ஓர் உணர்வு
என் கவிதைகள் நூல் வடிவில், இல்லை இது கனவு
உதவியது நம் மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம்
உண்மை இதை மறக்குமோ என்றும் நெஞ்சம்?
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment