வடை என்பது பருப்பு வீரர்கள் ஒன்றிணைந்த படை!
வடை கடையில்
ஒரு வடைக்கு இருவடை எடுக்கும் மாவீரர்கள்
இரண்டு பருப்புப் படைகளைத் திருவோட்டில் ஏந்தி
தெருவெல்லாம்
பருப்புப் படை வீரர்களைத் தம் பற்களெனும் ஆயுதங்களால் வீழ்த்திக்( கடித்துக் ) கொண்டே பயில்வர் நடை!
பருப்புப் படையின் அரசனான கடைக்கு அதிபதியின் கதியோ அதோ கதி 🙄
- சாய்கழல் சங்கீதா
*******************
டீ கடை நினைவு....
இனிய மாலைப் பொழுதினிலே...
டீக்கடையில் ,
டீயுடன் நாவில் இணைய -
சுடச்சுட சுட்டவடை காத்திருக்க..
சுட்டதைச் சுட்டேன் ஆசையில்..
ஆனால்..
என்விழிகள் நிலைத்தன அவன்மீசையில்...
மனம் சுட்ட மனக்கள்ளனே...
(சுட்ட - செய்த, களவாடிய)
உறங்காது கனவில் பேசும்,
ஓய்வில்லாது தனியே தவிக்கும்..
இன்பம் துன்பம் என்றில்லை,
அனைத்து நிகழ்வும் இதனுள்ளே..
முகத்தில் தோன்றும் அபிநயமும்,
இதன் மாற்றந்தரும் நவரசமே..
வாழ்வின் வரலாற்று பெட்டகமிது,
விழி காணா பொக்கிஷமிது..
புதைந்து கிடக்கும் அதனுள்ளே,
நுழைந்தது எப்படி நானறியேன்..
முன்பதிந்தது அனைத்தும் களவாடி,
பதித்தான் காதலின் கண்ணாடி..
இப்போது அதனுள் ,
முன்னாடி பின்னாடி கண்ணாடி..
கனவிலும் நினைவிலும் ,
கள்வா, உன்னுருவமே ஆடுதுபாடி...
என்மனம் சுட்ட மனக்கள்ளனே...
நான் இனி,
சுட்டவடைச்சுட வருவேனிங்கு நித்தம்..
மனம் சுட்ட,
கள்வன் உன்மீது உன்மத்தம்..
உன்மத்தம் - பைத்தியம்..
- இலாவண்யா
*************
[மெட்டு: ஓன் மேல ஆசை தான்]
👨ஓன் மேல ஆசை தான் !
👭கர கர மொறு மொறு கடிச்சு சுவைதிடு !
👨இது உணவின் ராசா தான் !
👭தொண்டைக்குழி நனைய டீயும் பணிந்திடும் !
👨காத்தாகி போகும் வயிறும் கூத்தாடுமே !
கண் நாடி ரெண்டும் இப்போ சேர்தாடுமே !
காபி ☕️ரைட்ஸ் மன்னிக்கவும்!
_தேவி அருண்_
*******************
No comments:
Post a Comment