*வெயிலுக்குப் பிறகு…*
நேற்றுவரை வேகவைத்த வெயில்,
வெந்த நிலத்தில் நம் நிழல்கூடக் கருகியது,
இன்று காலை ஒன்பதிலே,
கருணைமழை கொண்டு வந்த இருள் மையல்!
கிழக்கே உதிக்க வேண்டிய சூரியன்,
மேகச்சட்டை போர்த்திக் கொண்டான்,
நள்ளிரவென வானம் நிமிர்ந்தது,
காலை சாயலில் இரவு வந்தது!
வெயிலின் கோபத்தை ஏசி ஓட்டி,
“சூரியனே போதும்!” என்று சபித்தோம்,
மழை பெய்ததும் — ஆஹா! சுவாசம் சொரிந்தோம்,
ஆனால் சில மணி நேரத்தில்… ஏன் இந்த அலுப்பு?
மழையின் இசை இனிமை இல்லை,
மனதின் ஓசை மங்கியது,
சுறுசுறுப்பு தொலைந்து சோம்பல் சுரண்ட,
“மழை மழை போய்விடு” என்றோம் நாமே!
வெயிலும் சோதனை, மழையும் சோதனை,
மனதின் மையம் எங்கே போனதோ?
இயற்கை ஆட்டம் தொடரும் நம் மேலே,
அதில் நாமும் ஒரு இசைதான் — தேடும் ஓர் சுருதி!
No comments:
Post a Comment