சட்டென்று மாறியது வானிலை
கூடவே மாறியது மனநிலை!
சில்லென்ற காற்று வீசுதம்மா...
மனமெல்லாம் வசந்தமாகிப்
போனதம்மா..
அக்னியாய் கோபத்தில் தகிக்காமல்
வானத் தாயவள் வாஞ்சையோடு
மண் குழந்தைக்கு ஊட்டிய மழையமுது கண்டு
எம் நெஞ்சமெல்லாம் குளிர்ந்ததம்மா..
இது போதும் எமக்கு
இவ்வளவே போதும்!!!
கடுங்காற்று, இடியோடு
மரங்கள் விழுந்தது என
எந்த ஊடகமும்
மூச்சுப் பிடிக்க
செய்திகளைப வாசிக்க வேண்டாம்..
இது போதும் எமக்கு!
இவ்வளவே போதும்!!!
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment