உச்சத்தில் கோடையின் கோரத் தாண்டவம்
உமக்கும், எமக்கும் இது நன்றாய்த் தெரியும்
தச்சி மம்மு (தயிர் சாதம்) இளக்கி சிறார்க்குத் தருவோம்
தளிராம் அவர் குடலைக் குளிரச் செய்வோம்
மிச்சமாம் சோறு அதில் நீரைச் சேர்ப்போம்
மிகச் சிறந்த அதை அடுத்த நாள் உண்போம்
பச்சை மிளகாய் பயன்பாடு பாதியாய்க் குறைப்போம்
பானகம் (வெல்ல நீர்), இளநீர், நீர் மோர் அதிகம் குடிப்போம்
மொச்சை, கடலை எனத் தவிர்த்தல் நன்றாம்
முகத்தை பூவையர்கள் மூடுதலும் நன்றாம்
பிச்சைமணி ஐயா போன்றோர் போக வேண்டாம் வெளியே
பெரிய மர நிழல்கள் உள்ளனவே உள்ளே
இச்சையாக எங்கும் சுற்றுதல் அது கேடாம்
" இலவசப் புத்தகம் பெறப் போதல் " வேறாம்
அச்சமில்லை திராவிடன் என்பது அறியாமை
அக்னி நட்சத்திரம் இன்று முதல் எச்சரிக்கை .
__. குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment