Monday, May 26, 2025

தனக்கு வந்தால் தான்...

 தனக்கு வந்தால் தான்... 


கிளியை வளர்த்து பூனையிடமா தருகிறார்? 

   கேவிக் கேவி ஏனாம் மாமனார் அழுகிறார்? 


எளிய கிராமம் தான் என்னுடைய பின்புலம்

   எல்லாம் அறிந்தே பண்ணி வைத்தார் எம்மணம்


புளிய மரம் கொல்லையில் மூன்று உண்டாம்

   போதும் என்றாலும் காய்க்கும் முருங்கையாம்


குளிக்க வாய்க்காலாம், அழகிய கிணறுமாம்

   கோயிலாம், ஏரியாம்,...வேறென்ன வேணுமாம்


உளி வடித்த சிற்பம் தான் அவரின் பெண்ணாம்

   ஊரெலாம் மெச்ச நடந்த என் திருமணமாம்


குளிர் நிலவாய் காலம் உருண்டோடியது

   குழந்தைகள் இருவரில் மகளும் உண்டு


வளர்ந்தாள் அவளுக்கு திருமணமாம் இன்று

   வாழ்த்த வந்தார்க்கு " ஞானாம்பிகா " விருந்து


தெளிந்தேன் மாமனார் ஏன் அழுதார் அன்று

   தேனாம் என் மகள் பிரிகிறாள் இதோ இன்று. 


__  குத்தனூர் சேஷுதாஸ் 26/5/2025

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...