Friday, May 30, 2025

நிர்வாகக் குழு கூடுகை (2) விவரணம் - 2025

 __________________________

நிர்வாகக் குழு கூடுகை (2) விவரணம்

------------------------------------------


நமது மகாகவி பாரதி தமிழ் சங்கத்தின் இரண்டாம் நிர்வாக குழு கூடுகை அவசர கூடுகையாக 30.5.2025 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு 

சி-19 106 இல்லத்தில் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என தகவல் கொடுத்தோர்: மலர்விழி,

சுல்தானா, ராஜேஸ்வரி, சிவகாமி, அமுதவல்லி,

அனிதா, 

காமாட்சி,

செங்கதிர் செல்வன் ஆகியோர்.


கூடுகையில் கலந்து கொள்ளாதோர் 

சுபாஷினி மற்றும் கே எஸ் சுந்தரம். 


கூடுகை தமிழ்த்தாய் வாழ்த்தோடு துவங்கியது.


சென்ற கூடுகையில் நாம் முடிவு எடுத்தபடி எம்ஜிஆர் ஜானகி பள்ளியில் இருக்கக்கூடிய டைரக்டர் கே. சுப்பிரமணியம் ஹால் என்கின்ற அரங்கத்தை நமது இரண்டாம் ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்காக புக் செய்து விட்டோம். இங்கிருந்து நமது உறுப்பினர்களை அழைத்துச் செல்ல இரண்டு குளிர் சாதன வசதி உள்ள வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான பொறுப்பு மைதிலி, மல்லிகா மற்றும் ரமணி அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. ஒரு வேனில் 25 நபர்களும் இன்னொன்றில் 15 நபர்களும் செல்ல இயலும். நபர் ஒன்றுக்கு 250 ரூபாய் பயண கட்டணமாக வசூலிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. இந்த வண்டி வசதியை பயன்படுத்த விளைவோரை விருப்பத்தை கேட்டு நமது குழுவில் பதிவேற்ற வேண்டும் என்று முடிவானது. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையிலே 40 உறுப்பினர்கள் இங்கிருந்து பயணிக்க அந்த வண்டி வசதி ஏற்பாடு செய்யப்படும். முன்கூட்டியே பணத்தை அவர்கள் சங்கத்தின் வங்கி கணக்குக்கு செலுத்திட வேண்டும் என்கின்ற முடிவும் எடுக்கப் பட்டது.


அதைப்போலவே தங்களது சொந்த பகிர்ந்து வண்டியில்  வருவோர் அவர்களுடன் மேலும் இருவரை அவருடைய காரில் அழைத்து வருவது Car pooling என்கின்ற அடிப்படையிலே உதவிகரமாக இருக்கும்.


மதிய உணவைப் பொறுத்த அளவிலே ஆனந்தாஸ் நிறுவனர் அதனை செய்ய ஒப்புக் கொண்டிருக்கின்றார். அதற்கான தொகையை சங்கம் அவருக்கு கொடுத்து விடும். மேலும், அவர் நமது தமிழ்ச்சங்க உறுப்பினராகவும் ஆகி இருக்கிறார், திரு ரமணி அவர்களின் முன் முயற்சியால். 


நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் திரு எஸ். பி. முத்துராமன், அபஸ்வரம் ராம்ஜி,  காத்தாடி ராமமூர்த்தி மற்றும் சிபாட்காஸ்ட் கதை சொல்லி' திருமதி தீபிகா அருண் ஆகியோர் அழைக்கப்படுகிறார்கள்.


நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி சிறுவர்களுக்கான நாடகத்தை நடத்துவதில் இருக்கக்கூடிய பொருளாதார மற்றும் கட்டமைப்பு நடைமுறை சிக்கல்களை திரு சாய்ராம் அவர்கள் விளக்கினார்கள். இப்பொழுது ஒரு பரிக்ஷார்த்த அடிப்படையில் மிக அதிக பொருட்செலவில் அந்த நாடகத்தை நடத்துவதை விட, அந்த நாடகத்தை இப்போது ஆகக்கூடிய செலவைவிட குறைவாக, ஒரு ஸ்டூடியோவில் டெலிஃபிலிமாக படம் எடுத்து அதனை சிறுவர்களுக்கான பிரத்தியேகமான நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்புவது சாலச் சிறந்தது என்று அவர் ஓர் ஆலோசனையை முன் வைத்தார். அதனை நிர்வாக குழு ஆழ்ந்த பரிசீலனைக்கு பின் ஏற்றுக் கொண்டது. 


இங்கிருந்து உறுப்பினர் அல்லாதவர் வருபவர்களை அந்த வேனில் அழைத்துச் செல்லலாமா? என்கின்ற ஒரு பொருள் விவாதிக்கப்பட்டது அவர்களுக்கும் அதே 250 ரூபாய் பயண கட்டணம் பெற்றுக் கொள்வது என்றும் அரங்கத்தில் அனுமதி கட்டணமாக உறுப்பினர் அல்லாதவர் நபர் ஒன்றுக்கு 200 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நிர்வாக குழு முடிவு எடுத்தது. 


நமது சங்க சட்ட விதிகளின் பிரகாரம் ஒரு குடும்பத்திற்கு ஒரு சந்தா என்ற நாம் முடிவு எடுத்திருக்கிறோம் குடும்பம் என்பது ஒரே கதவு இலக்கத்தில் வசிக்கக்கூடிய குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் என்கின்ற பொருளை பலமுறை நிர்வாகக் குழு கூட்டத்திலே பொதுக் குழு கூட்டத்திலே நாம் விளக்கி இருப்பதை நினைவு படுத்தப் பட்டது. ஒரே வீட்டில் வசிக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்கள் ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக நான்கு பேர் கலந்து கொள்ளலாம் என்கின்ற முடிவும் நிர்வாக குழுவால் எடுக்கப்பட்டது. அதற்கு மேல் வரக்கூடிய எந்த ஒரு உறுப்பினராக இருந்தாலும் அவரும் அனுமதி கட்டணம் 200 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் முடிவானது.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...