Friday, May 2, 2025

மாமரமும் சென்னை மெட்ரோவும்!

 மாமரமும் சென்னை மெட்ரோவும்!

--------

என்ன ஐயா இது?


"மொட்டைத் தலைக்கும்ம்

 முழங்காலுக்கும் முடிச்சு போட்டால் போல"


தொடர்பு உள்ளது சாமி


ஆம்


பாட்டன்  மாங்கன்றுகளை நடுகிறார்.

பேராண்டி தாத்தாவிடம்

இது வளர்ந்து மரமாக, கனி தர வருடம் பல ஆகுமே, உனக்கு வயதாகி விட்டதே என்று கேட்கிறான்.


உனக்கும் உன் சந்ததிக்கும் கனிகள் கிடைக்கட்டுமே என்றுதான் நட்டேன் என்றார்.


சென்னை மெட்ரோ பணிகள் 2009 ல் ஆரம்பித்து, இன்று  வரை, எதிர்காலத்தில்

பல ஆண்டுகள் வரை தொடரும் போல.


எத்தனை அடைப்புகள், எவ்வளவு சுற்றுவழிகள்.

கூகுளையே " வெச்சு செய்யும்" மாற்றுப்பாதைகள்

ஒரு இடம் செல்ல!


கயிலையே மயிலை என்பர். இன்று கயிலை செல்வது சுலபமாக இருக்கும்.


தி்நகர், திணற வைக்கும் நகர்! ஆம் .

போய் வருவதற்குள்

ஒரு மாமாங்கம் கழிந்த உணர்வு.


அப்போதெல்லாம் நினைப்பேன், இன்று நான் சிரம ப்பட்டாலும்

நாளைய சந்ததிகள் நன்கு பயணம் செய்ய

முடியுமே என்று.


பட்ட சிரமங்கள் சூரியனைக் கண்ட பனி போல மறையும்.


அன்று பாட்டன்

இன்று நான்

நானும் பாட்டனதானே!


-மோகன்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...