தெரிந்த இலக்கு
தெரியாத தூரம்
அறிந்த மனிதன்
அறியாத உறவு
பிரிந்த சொந்தம்
பிரியாத நினைவு
கரைந்த இரவு
கரை சேரா கனவு
முடிந்த நாவல்
முடியாத கதை
அறிந்த விடயம்
அறியாத உண்மை
தெளிந்த சிந்தனை
தெளியாத புதிர்
நினைத்த வினா
நினைக்காத பதில்
வரைந்த ஓவியம்
வரையாத எண்ணம்
மலர்ந்த மலர்
மலராத மணம்
தேடும் மனம்
தேடாத கண்கள்
எழுதிய கவிதை
எழுத முடியா கற்பனை
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment