எல்லைச்சாமி!!!
நாங்கள் வீட்டிலேயே இருந்தால் "போர்" அடிக்குது..என்கிறோம்..
நீங்களோ வீட்டிற்கே செல்ல முடியாமல்
போர் முனையில்..
உங்களால் நிம்மதியாய்
உறங்குகிறோம்..
கல்யாணம் கச்சேரி
செல்கிறோம்..
கல்லூரி விடுதிக்கு
பிள்ளையை அனுப்பவே
பரிதவிப்போம் நாங்கள்..
உங்களை அனுப்பிவிட்டு உம் குடும்பத்தார்
சிந்தும் கண்ணீரை ..
உம் குழந்தைகளின் ஏக்கத்தை..
அவர்களைப் பிரிந்து
நீங்கள் படும்பாட்டை ..
விவரிக்க வார்த்தைகள் உண்டோ?
எமக்கோ சிறு அடி பட்டாலும்
ஆறுதல் சொல்ல
உறவுகள் அருகே..
குண்டடி பட்டாலும்
எட்ட முடியா தூரத்தில்
நீங்கள் அங்கே!
உண்டீர்களா? உறங்கினீர்களா?
தெரியவில்லை உம்
உறவுக்கும்..
ஊருக்கு எல்லையில்
எங்களுக்குக் காவலாய்
எல்லைச்சாமி!
உம் இன்னுயிர் கொடுத்தும்
எம்மைக் காக்கும் நீங்கள்
நம் நாட்டிற்கே
எல்லைச்சாமிகள்!!!
- சாய்கழல் சங்கீதா
**************************
👍👍
எல்லைச்சாமி!
கும்பிடுதேன்!
நம் காலம் முடியாமல்
காக்கும் இவர்களைப் போற்ற , பாராட்ட காலம் ஒரு வரையறு அன்று.
நாட்டுக்கு உழைத்து, இமைப்பொழுதும் சோராது இருக்கும்
இவர்கள் மூச்சே தேசம் காக்கும் பராணவாயு.
உடல் நாட்டுக்கே , உயிர் நம்மைக் காக்கவே என்று
அர்ப்பணித்த இவர்களுக்கு பனி, , மழை , குளிர் ஒரு பொருட்டா?
அல்ல, அல்ல.
தேசப்பற்று எனும் வெம்மை இவர்களைக்காக்கிறது; கோடானு கோடி மக்களின் உதடுகள் உச்சரிக்கும் பிரார்த்தனைகளும் தான்.
நமக்கோ சில உறவுகள.
இவர்களுக்கு நாடே உறவு அன்றோ!
கூலிப்படைகளை ஓலமிட்டுப் புறமுதுகு காட்டச்செய்யும்
இப்படை தோற்கின்
எப்படை வெல்லும்?!
நம் மகளிரின் சிந்தூரமே இவர்களைக் காக்கும் காப்பு.
இவர்கள் காப்பது எல்லை;
நம் உள்ளங்களில் இவர்களுக்கு நாம் வைத்திருக்கும் அன்புக்கும், மதிப்புக்கும் இல்லை எல்லை.
இவர்தம் இல்லக்கிழத்தியரும்
இங்கு நம்மைக் காக்கும் காவல் தெய்வங்கள்; இந்தக்
காக்கும் குடும்பங்களைப் போற்றுவோம்🙏🙏
- மோகன்
No comments:
Post a Comment