மே தினம் இன்று:
தொழிலாளிகளைக் கொண்டாடும் தினம்.
ஆங்கிலத்தில் "மே டே"
என்றால் தொழிலாளிகளைக் கொண்டாடும் தினமாகவும்" துன்ப சமிக்ஞை" யைக் குறிக்கவும் கொள்ளலாம்.
என்ன ஒற்றுமை!
இவர்களைக் கொண்டாடும் நேரத்தில் ,இவர்படும் துன்பம் பல சமிக்கைகளை செய்தாலும் சமூகம்
கண்டு கொள்கிறதா?
" அந்த நாலு பேருக்கு நன்றி" என்றார் கவிஞர்.
ஆனால் நமக்காக உழைப்பவர் நான்கா, நாலாயிரமா?!
எங்கோ ஆந்திரமோ , குஜராத்தோ, வெயில், மழை பாராது உழைத்தவர் கொடுத்த தானியங்கள்,
வீட்டு வாசலிலே பண்டங்களைக் கொண்டு சேர்க்கும் விநியோகப் பணியாளர்கள்,
போகுமிடம் பத்திரமாக சேர்க்கும் ஓட்டுனர் பார்த்த சாரதிகள் எனப்
பலப்பல பணியாளர்களை,
நம் வாழ்க்கைத் தூண்களைத் தாங்கிப்பிடிப்பவரை,
முகமும், முகவரியும்
தெரியாதவரை
இன்று நெஞ்சில்நிறுத்தி
இரு கண் மூடி வாழ்த்துவோம், நன்றியுடன்.
--மோகன்
No comments:
Post a Comment