உலகப் பூமி தினத்தில்...
சாமி நமக்கு ஈந்த கொடைகள் பலவாம்
சத்தியமாய் நாம் வாழும் உலகு முதலாம்
பூமி உயிர்க்கெல்லாம் பொதுவான தாயாம்
புழு முதல் நாமெல்லாம் அவளின் சேயாம்
சேமித்தவள் வைத்திருக்கும் செல்வம் ஏராளம்
சிறுகச் சிறுக நாம் செலவழித்தால் தாராளம்
மாமி மகளாய் இதைப் பார்த்துக் கொள்ள வேண்டும்
மரங்கள் நட வேண்டும், மாசு குறைக்க வேண்டும்.
__. குத்தனூர் சேஷுதாஸ்
********************
No comments:
Post a Comment