பா-ரதியின் தாசன்
தமிழன்னையின் நேசன்
தமிழர் உள்ளம் உறைநேசன்
புகழ் ஓங்கட்டும்
சித்திரச் சோலைகளை
கண்டு மகிழ்வோர் மத்தியில்
அதைத் திருத்த ரத்தம் சொரிந்த
கைகளை நினைத்துப்
போற்றியவன்...
ஆர்த்திடும் எந்திர
கூட்டங்களின்
ஆதிஅந்தம் சொல்கையில்
ஊர்த் தொழிலாளர்
உழைத்த உழைப்பை
தன் கவிதையில் ஏற்றியவன்..
ஆள்வோரின் மனங்குளிர
ஆங்கில மோகத்தை
ஊட்டி வளர்த்த அடிமை உள்ளங்களைத் தூற்றியவன்.
வாழிய அவன் புகழ்!
--ஸ்ரீவி
************************
பாவேந்தர் நினைவில்...
அமுதென்று தமிழுக்குப் பொருள் கூறினீர்
அதற்கும் மேலும் பலப்பல அடுக்கினீர்
குமுதமாய் மலர்ந்தீர் குளிர் நிலா பாரதி என்றீர்
குருவாய் அவரை ஏற்று பாரதிதாசன் ஆனீர்
தமிழ்ச் சோலையில் நீர் வளர்த்த கவிதைகள்
தமிழ்க் கவிஞர்கள் அனைவரின் விதைகள்
அமைதியானீர் இந்நாள் அகவை எழுபத்து இரண்டில்
ஆனாலும் இன்றும் ஆள்கிறீர் எம் நெஞ்சில்.
__. குத்தனூர் சேஷுதாஸ்
************************
No comments:
Post a Comment