படம் பார்த்து
பா எழுது!
°°°°°°°°°°°°°°°°°°
ஒரு கையில் கைபேசி எடு!
ஒருகையில் பாட்டி வாயை மூடு!
இன்றைய குழந்தைகள்
--- ஸ்ரீவி
******************************
குறும் பிசாசு
ஆட்டிப் படைக்கிறது கைப்பேசி நம்மை இன்று
அழகுப் பெயர் சூட்டினார் குறும் பிசாசு என்று
கூட்டுக் குடும்பம் சிதைந்து வெகுநாளானது
குழந்தை வாயடைக்க குறும் பிசாசு நுழைந்தது
பாட்டி சொலும் கதைகள் கற்பனையைத் தூண்டியது
பாவம்! குழந்தை இன்று ரீல்ஸ் வேண்டுகிறது
போட்டுடைத்தால் புதிய ஒன்று விரைந்து வருது
புராணக் கதைகள் சொல பாட்டி மனம் ஏங்குது.
__. குத்தனூர் சேஷுதாஸ்
******************
பாசமிகு பாட்டியிடம்...
வளர்ந்த கதை வாழ்ந்த கதை
படித்த கதை கேட்ட கதை என
கேட்டு வியக்க...
எண்ணிலடங்கா
கதைகளுண்டு
ஓடியாடி களைத்த பிள்ளை
படித்து முடித்து ஓய்ந்த கிள்ளை
இளைப்பாறி கண்ணயர...
சொல்லில் அடங்கா
பாடல்களுண்டு
பாட்டியின் கைகளுக்குள் உலகம்
அனுபவங்களால் நிறைந்தது
மனதின் உணர்வறிந்து
மாயை மருளகற்றி
அன்பால் மயக்கும்
அறிவுக்கண் திறக்கும்
உலகை அடக்கிய அலைபேசி
இருமுனை கத்தி அது
நனவின் வாய்மூடி
கனவில் திளைக்க செய்து
ஆசையால் ஈர்க்கும்
அறிவை மயக்கும்
பாட்டிக்கு இடமிருந்தால்
மனமும் மகிழ்ந்திடும்
அறிவும் தெளிவாகும்
அப்பொழுது...
அலைபேசியும் தணிக்கும்
பிள்ளையின் அறிவுப்பசி
- அமுதவல்லி
************************
பாட்டி இருந்தால் அவள்சொல்லைத்தட்ட முடியுமா!
அந்தப் பொக்கை வாய்க்குள் எத்தனை கதைகள்!
உடலின்ஒவ்வொரு சுருக்கமும் ஒரு கதை
பேசுமே!
பாடல் பட்டியலே( playlist)
தேவையில்லை; பாட்டியின் பாட்டு இயலே
போதும்!
நிலவையும், நிலாச்சோறையும்
பாட்டியின்றி ரசிக்க
முடியவில்லை.
எத்தனை காணொளிகள் ,பாட்டுகள் இருந்தாலும்
அலை பேசியால் பாட்டிகளை" அடிச்சிக்க முடியாது"!
- மோகன்
*******************
No comments:
Post a Comment