விளைநிலங்கள், விலைநிலங்கள் ஆனது
விளைச்சல் குன்றியது
விலைவாசி விண்ணைத் தொட்டது
விலையின்றி கிடைத்த தண்ணீருக்கு
விலை கொடுக்கும் நிலை வந்தது
விளைநிலங்களைச் சுற்றி நகரம் தோன்றியது
விளைநிலங்களே நகரங்களானது
வற்றிப் போனதால் வாய்விட்டு கதறுகிறோம்
விலைக்கில்லாமல் எங்களை வாழவிடுங்கள்
வாழையடி வாழையாய் உங்களையும் வாழ்விப்போம்!!!
இப்படிக்கு
விளைநிலங்கள்
No comments:
Post a Comment