என்று தணியும் தீவிரத்தின் தாகம்?
சிவப்புத் தங்கமாம் குங்குமப்பூ விளையும் காஷ்மீர்.. இரத்தத்தால்
சிவப்பது என்று தான் நிற்கும்?
பல்லுயிர் ஓம்பும்
சன்மார்க்கம் இம்மண்ணில்
என்று தான் மலரும்?
தாய் தந்தைக்கு மகன்
மனைவிக்கு கணவன்
கட்டிய புதுமணப்பெண்
பெற்றோரை இழந்து நிற்கும் இளம் மொட்டுகள்..
இப்படி உயிர்களைக் கொன்று குவித்து குடும்பத்தின் தூண்களை உடைத்தெறியும்
கல் மனங்களின் உருவாக்கத்தை நிறுத்த இயலாதா இறைவா?
மண்ணுக்கும் பொன்னுக்கும் அடித்துக் கொள்ளும் மடமை ஒழியும் நாள் உண்டோ இறைவா?
அமைதிக்கு அனுமதி தாருங்கள் எம்மண்ணில்!
- சாய்கழல் சங்கீதா
****************
வெள்ளைக் காஷ்மீரம்
பிரிந்து போன பின்னும் பிரச்சினை செய்கிறான்
பிச்சை எடுத்தும் தொல்லை கொடுக்கிறான்
அரிய மனித உயிர்களைக் குடிக்கிறான்
அப்பாவிகளைக் கொன்று குவிக்கிறான்
துரிதமாய் அரசு செயலில் இறங்க வேண்டும்
தோட்டாக்களுக்கு பீரங்கி பதில் வேண்டும்
வெறி பிடித்த தீவிரவாதம் வீழ வேண்டும்
வெள்ளைக் காஷ்மீரம் மீள வேண்டும்.
__. குத்தனூர் சேஷுதாஸ்
*********************
மனிதனே விதைக்கிறான்
மண்ணின் மீது மதவாதம்
மனித நேயத்தின் எதிர்ப்பதமே மதமன்றோ!
ஓ மனிதா , ஒன்றை நீ இன்றுணர்வாய்
தன்னினத்தை தானே அழிக்கும்
ஒரே இனம் உன் இனமே
யாதும் ஊரென்பாய்
ஒருதலையாய் உயிர்கொல்வாய்
யாவரும் கேளீரைன்பாய்
கேட்பாரின்றி உயிர்பறிப்பாய்
உல்லாசப்பயணியா? ஊர்க்குருவியா?
உன்விருப்பம் போல சுட்டுத்தள்ள?
நாள் ஒன்று விரைந்து வரும்
நியாயத்தீர்ப்பு உன் மேல் வரும்
நீதி தேவன் நிச்சயமாய் நீதி செய்வார்
--தனா
*******************************
No comments:
Post a Comment