Thursday, April 24, 2025

பகல்காம் பதறுகிறது

பகல்காம் பதறுகிறது

பூவுலகப் பூந்தோட்டம்

கண்ணீர் விட்டு

கொடுமையாய்க் கதறுகிறது


மனிதம் தொலைத்த

காட்டுமிராண்டிகளின்

கொலை வெறியாட்டம்

நாட்டை உலுக்குகிறது.


தீவிர வாத செயல்களை

தீயிலிட்டு பொசுக்கிட

ஒட்டு மொத்த நாடும்

கரங்கள் இணைக்கட்டும்!


மதம்,மொழி, இனம், சாதி என

எவ்விதத்திலும் 

தீவிரவாதம் தலைதூக்கா அளவிற்கு

மனிதமும் நேயமும் 

தழைத்தோங்கட்டும்.


உயிர்குடிக்கும் நீசச் செயல்கள்

மண்ணோடு மண்ணாகிப் போகட்டும்.


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*


*********************

எம்மதமும் சம்மதம்.... என்றில்லாமல்,


என் மதம்,உன் மதம் என்று,


மதவெறி பிடித்தலைந் தால்.....


மனித இனமே....

நீ பூண்டோடு அழிந்து போவாய்....

இப்படிக்கு,

மதத்தை கண்டுபிடித்த மானங்கெட்ட மானிட வர்க்கத்தினன்😡


-சாய் 

********************

தீவிரவாதம்..

தீர்வு - தீவிர 'வாதம்' அல்ல..

தீவிர வதமே தீர்வு ...மதவாதம் , இனவாதம் இவற்றின் வதம்..


இது உலகின் பக்கவாதம்..

குருதியோட்டம் தடைப்பட்டால் பக்கவாதம்..

குருதிப் பெருக்கெடுத்து,

மனிதநேயம் விடைபெற்றால் தீவிரவாதம்..


-இலாவண்யா


******************


 

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...