சித்திரை முதல் இன்று தமிழாண்டு தொடக்கம்
சிறப்பாய் "விசுவாவசு" இவ்வாண்டு இருக்கும்
புத்திரி, புத்திரன் கழுத்தில் மணமாலை ஏறும்
புழு பூச்சி உண்டாகி அவர் வாழ்வு சிறக்கும்
சத்தான உணவையே பிள்ளைகள் உண்ணும்
சடுகுடு விளையாடி, களைக்கும், துஞ்சும்
தித்திக்கும் தமிழதில் திகட்டா பலவும் வரும்
" தொடை நடுங்கி, கோடை இடி" அதுவும் சேரும்
பத்திரமாய் இதயங்கள் பாதுகாக்கப் படும்
பல மருத்துவமனை வெறிச்சோடிப் போகும்
அத்திப்பழ அரசியல் அது அடியோடு தொலையும்
அத்தனை புழுவும் முத்தாய் மாதுளையாகும்
குத்தனூரானுக்கும் மேடை தந்த தமிழ்ச் சங்கம்
குறித்த தேர்தல் இன்று நலமாய் நடக்கும்
அத்துணை இன்பமவை குற்றாலமாய்க் கொட்டும்
அகிலம் முழுமைக்கும் அமைதியது கிட்டும்.
__. குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment