கவிதை என்று எதைச் சொல்வேன்...
இலக்கணத்துள் அடக்கினர் சிலர்
இலக்கணத்தை மீறினர் சிலர்
கவிதை என்று எதைச் சொல்வேன்..
மனதைத் தொட்ட வடிவெல்லாம்
எனக்கு கவிதையானது
உனக்கு நகைப்பானது
கவிதை என்று எதைச் சொல்வேன்...
மழலையை இரசித்தேன்...அன்பென்றனர்
மலரை இரசித்தேன்... அழகென்றனர்
தோட்டத்தில் மழலையை மலரென்றேன்
கவிதை என்றனர்
மழலையும் மலருமே கவிதை என்றனர்
கவிதை என்று எதைச் சொல்வேன்...
- அமுதவல்லி
No comments:
Post a Comment