Friday, March 21, 2025

கவிதை என்று இதைச் சொல்வேன்

 கவிதை என்று இதைச் சொல்வேன்...


கவிதை என்பது சிலருக்கு 

நகைப்பாகலாம்

மேலும் சிலர்

ஏகடியம் பேசலாம்.


மனதைத் தொட்டதெல்லாம்

சொற்களின் தொகுப்பால்

ஒளிர்கையில்


கவிதை என்று அதைச் சொல்வேன்.


இதுவா கவிதை என

சிரிப்போர்

சிந்தனைகளைக் 

கவிதையாய் வடிப்பரோ?

சுழலும் சொல்லாடல்களால்

படிப்போர் மனங்களைக் கவர்வரோ..?


நகைப்போர் நகைக்கட்டும்

திகைப்போர் திகைக்கட்டும்

சிந்தனைச் சிதறல்களை

கோத்தெடுத்து

அழகிய பாமாலையாய்த்

தொடுத்திடுவோம்.

படிப்போர் மனம் மகிழ கவிதையாய்க் கொடுத்திடுவோம்.


கவிதை அதுவே என்று 

களிப்புடனே கூறிடுவோம்.


தமிழன்னை ஆசி தருவாள்.

மகாகவி கைபிடித்து அழைத்துச் செல்வான்


ஆதலால் கவிதை எழுதுவீரே...

உலகத்தீரே..


- ஸ்ரீவி

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...