Friday, March 21, 2025

உலக கவிதை நாளில்...

 உலக கவிதை நாளில்... 


" கவிதை தினம் இன்று கலக்கு போ " என்றது

   காலை நாள்காட்டியின் கட்டளையாம் அது


புவியில் பலவாம் புருவங்கள் உயர்த்துவது

   புலவர்கள் இதுவரை புகலாதது இங்கேது?


சுவையாக இருக்க வேண்டும் சொல்ல முனைவது

   சுருக்கமாய் உரைத்தலே கவிதைக்கு அழகு


எவை எழுத எல்லோரையும் படிக்க வைக்கும்

   ஏற்காடு குளிர்ச்சி இங்கேயே மனம் உணரும்


அவியல் தான் உடனே நினைவுக்கு வந்தது

   அத்தனை காய்கள் சேர்ந்த அமுத கூட்டணியது


துவையலும் சுவையில் சோடை போகாது

   துணையாக சுட்ட அப்பளம் சொர்க்கமே அது


உவகை அது மனதுக்கு அவசியம் வேண்டும்

   உப்புச் சப்பில்லா வாழ்வு உட்கார வைக்கும்

   

அவையடக்கம் தடுக்க தவிர்த்தேன் பல இங்கு

   அகவை அறுபது கடந்த எனக்கு ஏன் வம்பு? 


__  குத்தனூர் சேஷுதாஸ்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...