இன்று கவிதைகள் தினமாம்
கவிதை பாடக் கட்டளையிட்டார்
குத்தனுரார்.
நானும் மண்டப வாசலில்
"கவி" போல முக்கண்ணாருக்குக்
காத்திருக்கிறேன்.
உமையவளுடன் ஊடலாம்.
சிவனும் வரவில்லை
சிறந்த கவிதையும் வரவில்லை.
அதற்குள் அரண்மனை வாசலில்
கவிதையுடன் ஆயிரம் பேர்.
நிதிச் செயலருக்கு
ஒரு வேண்டுகோள்.
நான் வரும் வரை
பொற்கிழியைக் கொஞ்சம்
நிறுத்தி வையுங்கள்.
------------------
நான் எழுதி கிழித்த கவிதைக்கு(?)
பொற்கிழி கிடைக்காவிட்டாலும்..
நக்கீரன் போல் யாரேனும் குற்றம் கண்டுபிடித்து
கேள்விக் கணைகளால்
என்னைக் கிழி கிழி என்று கிழிக்காமல் விட்டாலே போதும்🙏
படித்து விட்டு
யாரேனும் நெற்றிக் கண்ணைத் திறந்தால்...
பொற்றாமரைகள் மலராத
பூர்வா நீச்சல் குளம் இருப்பினும்
நீந்தத் தெரியாது ஐயா..
- முகம்மது சுலைமான்
No comments:
Post a Comment